அந்தக் காரியம் நடப்பதற்கு லஞ்சம் கொடுக்கவில்லை, பதவி அதிகாரம் எதையும் பயன்படுத்தவில்லை. ஒரு சின்னத் தொடர்பை ஏற்படுத்தினோம்.
என் நண்பருக்கு காரியம் நடக்க வேண்டும். அதே துறையில் இன்னொரு ஊரில் இருக்கும் என் நண்பர் குணாவிடம் கேட்டேன் " சம்பத்ங்கறவரப் போய் பார்த்து என் பெயரச் சொல்லச் சொல்லு" என்றார். குணா பெயரைச் சொன்னதும், மாஜிக் நடந்திருக்கிறது. "ஒரு மாத வெட்டி அலைச்சலில் இன்னிக்கித் தான் உருப்படியா ஒரு அசைவு நடந்திருக்கு" என்றார் மாயா. மட்டுமல்ல "குணா பெயரைக் கேட்டதும் அதிக சந்தோஷமா ஆயிட்டாரு. அவரு ஃபோன் நம்பர் இருக்கான்னு கேட்டார்" என்றார்.
நடந்தது என்ன? "அந்த ஆள ஒருத்தனும் மனுஷனா மதிக்காம இருந்தப்போ நான் அவர மதிச்சேன் அவ்ளோ தான்" என்றார் நண்பர் குணா. உண்மையிலேயே மனிதர்களை மதிக்கிறவர் அவர். "நீங்க எப்பவும் இருக்கற மாதிரி தானே இருந்திருக்கீங்க. அதுக்கே இத்தன நடக்குதுன்னா, எல்லா மக்களும் இப்படி இருந்தா, அல்லது நாம கொஞ்சம் எக்ஸ்ட்ரா முயற்சி எடுத்தா, ஒலகம் எப்படியோ மாறிடும் இல்ல" என்றேன் நான்.
இது தான் நெட் ஒர்க்.
நல்லவங்களோட நெட் ஒர்க் நல்ல நெட் ஒர்க்.
நல்லது பரவும் நெட் ஒர்க்.
Write comment (0 Comments)


